Sunday, July 27, 2008

எம்.பிகளின் குதிரை பேரம்! கேவலப்பட்ட ஜனநாயகம்!!



இந்திய இறையாண்மையின் மீது அணு சக்தி என்னும் ஒப்பந்த விசையை செலுத்தி இந்திய ஜனநாய கத்தை உடைத்தெறிய அமெரிக்கா கடும் முயற்சி எடுத்துள்ளது. படிப்புக் காக, அமெரிக்காவுக்கு ஏற்றுமதியான அறிவுஜீவிகள் இன்று அந்நாட்டின் அடிமை ஏவல்களாக மாறியிருப்பதும் அவர்களே ஜனநாயகத்துக்கு வேட்டு வைக்கும் ஆட்சியாளர்களாக நாடாளுமன்றத்தை அடைத்து நிற்பதும், நம் தேசத்தின் கவலையாகும்.

'அணிசேராமை' என்ற சர்வதேச அரசியல் கொள்கையை உருவாக்கிய நாடுகளில் ஒன்று இந்தியா. அமெரிக்கா உலகின் ஒரே வன்சக்தி என்ற நிலையில், அணிசாரா நாடுகளின் நடுநிலைமை நழுவி விட்டது.

இந்த வழுக்களில் அதிகம் சறுக்கி விழுந்த நாடு இந்தியா. செப்டம்பர் 11 நிகழ்வுக்குப் பிறகு பாஜக அரசுதான், முஸ்லிம் எதிர்ப்புக்காக அமெரிக்கா வுடன் அதிகம் நெருக்கம் கொண்டது. அந்த நெருக்கம் தான் இன்று, இந்திய இறையாண்மையின் மீது தாக்குதல் தொடுக்கும் தைரியத்தை அமெரிக்கா வுக்கு கொடுத்திருக்கிறது.

இடதுசாரிகள் சுட்டிக் காட்டுவது, இந்திய வெளியுறவுக் கொள்கையில் தலையிடும் 'ஹைடு' சட்டம் பற்றித்தான். யாரும் ஒப்பந்தமே வேண்டாம் என கூறவில்லை. இந்திய அரசியலை கட்டுப்படுத்தாமலும், சில மாற்றங்க ளுடனும், அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் கோரிக்கை. இந்த ஹைடு சட்டம் ஈரானோடு உள்ள இந்திய உறவை சீர்குலைக் கிறது. மன்மோகன்சிங் பிரதமரானதும் சொன்ன வார்த்தைகள் வன்முறையா னவை. அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புப் போரில் இந்தியா பங்கு பெரும் என்றார். அமெரிக்காவின் அத்தகையப் போர் என்பது பொய் யான குற்றச்சாட்டுகளால் முஸ்லிம் நாடுகளை அபகரிப்பது தான். அதை தான் ஆதரிப்பதாக மன்மோகன் சிங் கூறினார். பதவியேற்ற போதே கூறிவிட்டார். அதனால்தான் ஹைடு சட்டம் மன்மோகன் சிங்கையோ, அவரது கூட்டாளிகளையோ உறுத்த வில்லை.

சோனியாகாந்தி அமெரிக்கா சென்றிருந்த போது, 'அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள்' என்று குறிப்பிட்டார்.

இன்று ஜனநாயகம், நாடாளு மன்றம் இவற்றின் மரியாதை முற்றி லும் தோற்க்கடிக்கப்பட்டுள்ளது. 'குதிரை பேரம்' என்று சொல்லப்ப டும் அளவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தலா 100 கோடிக்கு விலை போயுள்ளதாக கூறப்படுகிறது.



முலாயம் சிங், அணு ஒப்பந்தத்தை விமர்சித்து வந்தவர். தற்போது, மன்மோகன் அரசை காப் பாற்றி, அமெரிக்காவுக்கு சாதகமான ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீர்வது என்பதில் முலாயம் சிங்கும், அமர்சிங்கும் உறுதியாக உள்ளனர். இந்த இசைவுக்கு எத்தனை கோடி விலை பேசப்பட்டது?

தனது மகனுக்கு அமைச்சர் பொறுப்பு தராததால் தேவகௌடா எதிர் அணி யில் இணைகிறார். சிபு சோரனும் பேரம் பேசி காங்கிரஸுக்கு ஆதார வளித்து விட்டார்.

முலாயம் கட்சியைச் சேர்ந்த முனவர் ஹுசைன் என்பவர் காங்கி ரஸ்காரர்கள் தன்னிடம் 25 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசினார்கள் என ஒரு குண்டை தூக்கிப் போட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த தினங்களில் பேரம் 100 கோடிகளை தாண்டியது என்றும் கூறப்படுகிறது. இது முற்றிலும் ஓர் அரசியல் சூதாட்டமே.

பிரதமர் மன்மோகன் சிங்கை முகேஷ் அம்பானி சந்தித்துப் பேசிய விஷயம் கசிந்த போது, குதிரை பேரம் உண்மை தான் என கருதப்பட்டது. நெருக்கடியான காலத்தில் அரசியல் வாதிகளுக்கு சில பல கோடிகளை எடுத்து வீசிவிட்டு, பல்லாயிரம் கோடிக்கு ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கி நாட்டையும் நாட்டு மக்கள் உழைப்பையும் சுரண்டுபவர்கள் இவர் கள். எதிர்முனையில் பாஜகவும், கருநாடகத்தின் சுரங்க உரிமையாளர் ஜனார்த்தன ரெட்டியின் கோடிகள் மூலம் எம்பிக்களை விலைக்கு வாங்கி ஆட்சி யைக் கலைக்க முயல்வதாகவும் கூறப்பட்டது.

ஒரு முறை நரசிம்மராவ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, ஒரு நாள் தாம தமாகவே வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. அந்த 24 மணி நேர இடை வெளியில் ஒரு ஆதரவு பேரம் பேசி முடிக்கப்பட்ட வரலாறும் உண்டு.

இந்திய அரசியலுக்கும், தரகு முதலாளிகளுக்குமான கள்ளத் தொடர் புக்கு நீண்ட வரலாறு உண்டு. ஆனால் அவை இதுவரை திரை மறைவு நடவடிக்கைகளாக இருந்து வந்தன.

இன்று அது பகிரங்கமாக வெளிப் பட்டுள்ளது. தேர்தல்களின் போது கோடிகளை கொட்டிக் கொடுத்து கட்சிகளை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திக் கொள்ளும் தொழில் அதிபர்கள் அந்த ஆட்சிகளுக்கு ஒரு ஆபத்து வரும் போது மீண்டும் கோடிகளை கொண்டு அவற்றை காப்பாற்றுகின்றனர். தொழில் அதிபர்களுக்கும் அரசியல்வாதிக்கும் இடையே ஒரு சர்வதேச உறவும், வர்த்தகமும் இருந்து வருகிறது. அதனால், உலகப் பணக்காரர்கள் ஒன்று கூடி தீர்மானிக் கும் ஒரு சம்வத்தில் 'ஜனநாயகம்' பேசும் சாமானியனின் நம்பிக்கை பறிபோகிறது. ஜனநாயகம் பணநாயகத் தின் முன் தோற்கிறது. தேர்தல் காலங் களில், தான் விரும்பும் கட்சி இது, தான் நேசிக்கும் வேட்பாளர் இவர் என்று தேர்ந்தெடுத்து சட்டமன்றங் களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் அனுப்பி வைக்கும் உழைக்கும் மக்களின் நிலை பரிதாபகரமானது. மக்களாட்சி மீது மக்கள் கொண்ட நம்பிக்கை நாசமாகிறது.

No comments: